இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையின் சார்பில் தணிக்கை வாரக் கொண்டாட்டம்
சென்னை
இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையின் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல அலுவலகத்தின் சார்பில் தணிக்கை வாரம் 2024 கொண்டாடப்படுகிறது.
இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிஏஜி அலுவலகத்தில், அன்றாட வாழ்வில் சமூக வலைத்தளங்கள் வரமா? சாபமா? என்னும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.
இந்தப் பட்டிமன்றத்தின் நடுவராக ஐஏஎஸ் அதிகாரி திரு இரா திருப்பதி வெங்கடசாமி கலந்து கொண்டார். சமூக வலைதளங்கள் வரமே என்ற தலைப்பில் திரு பி சுதாகர், திருமதி புஷ்பலதா மணிவண்ணன், திருமதி ஐஸ்வர்யா, திருமதி ராதா ஆகியோர் பேசினார்கள். சாபமே என்ற தலைப்பில் திரு கார்த்தி குமார், திருமதி லீனா மனோகரன், திரு ராஜேஷ் குமார், திருமதி ஷியாமளா ஆகியோர் பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் மூத்த அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.