மீனவர்களுக்கு டீசல் எஞ்சின் பராமரிப்பு குறித்த பயிற்சியை சூலேரி காட்டுக்குப்பத்தில் நடத்தியது ரிலையன்ஸ் அறக்கட்டளை
மீனவர்களுக்கு டீசல் எஞ்சின் பராமரிப்பு குறித்த பயிற்சியை சூலேரி காட்டுக்குப்பத்தில் நடத்தியது ரிலையன்ஸ் அறக்கட்டளை
ரிலையன்ஸ் பவுண்டேஷன் மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பல்வேறு தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக சேவையாற்றி வருகின்றது. குறிப்பாக தினசரி அடுத்த இரண்டு நாட்களுக்கான கடல்கால நிலை தகவல்களான கடல் அலை உயரம், காற்றின் வேகம், திசை, கடல் நீரோட்டம் குறித்த தகவல்கள் மற்றும் மீன் கிடைக்க வாய்ப்புள்ள இடங்கள் குறித்த தகவல்களை இந்திய கடல் தகவல் சேவை மையத்தில் இருந்து பெற்று மீனவர்களுக்கு வாய்ஸ் எஸ். எம். எஸ், வாட்ஸ் அப் மற்றும் மஜ்லி ஆப் மூலமாகவும் அளித்து வருகின்றது. மேலும் மீனவர்களுக்கு 18004198800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் கடல் கால நிலை குறித்த தகவல்களையும் உடனுக்குடன் அளித்து வருகின்றது.  மேலும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமான டீசல் எஞ்சின்களை பராமரிக்கும் முறைகள், சுத்தமான மீன்பிடி முறைகள், மீன்பிடிக்கும்போது மீனவர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது 

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், சூலேரி காட்டுக்குப்பம் மீனவர் கிராமத்தில் தங்கள் டீசல் எஞ்சின்களை முறையாக பராமரித்து அதன் வாழ்நாளை அதிகரிப்பது எப்படி என்ற நிகழ்ச்சியை ரிலையன்ஸ் பவுண்டேஷன் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி, விழுப்புரம் பகுதி டீசல் எஞ்சின் மெக்கானிக் தலைவர் செல்வமணி அவர்கள் கலந்து கொண்டு மீனவர்களுக்கு தங்கள் டீசல் போட் எஞ்சினை தினசரி எவ்வாறு பராமரிப்பது, பிரச்சனைகளை தவிர்க்கும் முறைகள், கடலில் டீசல் எஞ்சினில் பேரிங் உடைந்தால், டீசல் அடைப்பு, டீசல் ஓஸ் கட்டாவது போன்ற பிரச்சனைகளை எவ்வாறு சரிசெய்து கரைக்கு வருவது போன்ற விபரங்களை தெளிவாக விளக்கினார். 
இந்த நிகழ்ச்சியில் சூலேரி காட்டுக்குப்பம் கிராம மீனவர்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை திட்ட மேலாளர் ஜெயகிருஷ்ணன் அவர்கள் செய்திருந்தார்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image