பண்ருட்டியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெய்லானி தேர்தல் வாக்குறுதிகள்
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆகிய நான் தொகுதி மக்களுக்கு கொடுக்கும் தேர்தல் வாக்குறுதிகள் பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 சென்ட் மனை எங்களது ட்ரஸ்டுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து வழங்கப்படும், பண்ருட்டியில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவரப்படும், அடிப்படை வசதிகள் மருத்துவமனை சாலை இல்லாத இடங்களில் சாலை அமைத்தல் குண்டும் குழியுமாய் உள்ள சாலைகளை புதிய சாலை அமைத்தல்,பாதாள சாக்கடை திட்டம் பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி பேரூராட்சிகளில் அமைத்து கொடுத்தல்,பண்ருட்டி பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் பேருந்து பயணிகளுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படும், குப்பைகளை அகற்றி தொகுதியை சுத்தமாக வைத்தல், தொகுதியில் உள்ள மக்கள் குறைகளை தெரிவித்தால் உடனே அதை நிவர்த்தி செய்து கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன் மேலும் மக்கள் நீதி மய்யம் தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்கள் அறிவித்துள்ள திட்டத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் வழங்கப்படும் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படும் ஒன்றியம் பேரூராட்சி நகராட்சிகளில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என்றும் இன்னும் பல மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் ஆகையால் நீங்கள் டாக்டர் ஜெ ஜெய்லானி ஆகிய எனக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் இவைகள் அனைத்தும் செய்து கொடுப்பேன் என்று இறைவன் மேல் ஆணையாக உறுதி கூறுகிறேன் என்று கூறினார்