மதங்களை கடந்து மனித நேயத்துடன் செயல்பட்டு வரும் திண்டுக்கல் தமிழ் மாநில நாயுடு பேரவை மாநில தலைவர் லயன்.என். கிருஷ்ணமூர்த்தி நாயுடு.
சென்னை ருக்குமணி ராஜா நைனா அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க திருச்சி மாவட்டம் சேர்ந்த குணசேகரன் ( லாரி டிரைவர்) அவர்களை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற தமிழ் மாநில நாயுடு பேரவை ( அனைத்து நாயுடு நாயக்கர் கூட்டமைப்பு) நிறுவனரும் , மாநில தலைவருமான லயன்.என். கிருஷ்ணமூர்த்தி நாயுடு அவர்களின் உதவியை நாடினார்கள். ஆதலால் குணசேகரன் அவர்களை திருச்சி மாவட்டம் அருகில் உள்ள கிராமத்தில் அவரது இல்லத்தில் இருந்து கோவைக்கு சிகிச்சை பெற தமிழ் மாநில நாயுடு பேரவை ( அனைத்து நாயுடு நாயக்கர் கூட்டமைப்பு) ஆம்புலன்ஸ் மூலமாக திண்டுக்கல்லில் இருந்து திருச்சியில் உள்ள கிராமத்திற்கு சென்று அவரை அழைத்து கொண்டு அங்கிருந்து கோவைக்கு சிகிச்சை பெற தமிழ் மாநில நாயுடு பேரவை ( அனைத்து நாயுடு நாயக்கர் கூட்டமைப்பு ) மாநில தலைவர் திண்டுக்கல்லை சேர்ந்த மனித நேயமிக்க லயன். என். கிருஷ்ணமூர்த்தி நாயுடு அவர்கள் ஆம்புலன்ஸ் டிரைவராக அவரே சென்று குணசேகரனை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சையில் சேர்த்து விட்டார். அவர்கள் குடும்பத்தினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். யார் உதவி கேட்டாலும் சாதி , மத வேறுபாடின்றி அனைவருக்கும் இலவசமாக ஆம்புலன்ஸ் கொடுத்து உதவி வருகிறார். மேலும் பல்வேறு சேவைகளையும் செய்து வருகிறார். யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் அவர்களின் கஷ்டங்களை போக்க உடனே உதவி செய்து வருகிறார். இத்தகைய இவருடைய சேவையை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். உடன் இன போராளி பாலகிருஷ்ணன் நாயுடு வந்தார். கம்மா எழுச்சி பேரவை மாநில தலைவர் செல்வராஜ் நாயுடு கோவை மருத்துவமனைக்கு வந்து உதவி செய்தார்.