கீழ்ச்செருவாயில் அனைத்து  ஆசிரியர்கள் கூட்டமைப்புசார்பில் நிவாரணம் வழங்குதல்

கீழ்ச்செருவாயில் அனைத்து
 ஆசிரியர்கள் கூட்டமைப்புசார்பில் நிவாரணம் வழங்குதல்


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் ஊராட்சியில் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.


தமிழ்நாட்டில் 
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பெரங்கியம்
தொழுதூர் ம.பொடையூர் இடைச்செருவாய்
உட்பட  பல்வேறு ஊராட்சிகளில் நிவாரணம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் ஊராட்சியில் நிவாரணம் வழங்கப்பட்டது.


இந்நிகழ்விற்கு ஆசிரியர் கூட்டமைப்பின் ஒன்றிய செயலாளர் லட்சாதிபதி தலைமை வகித்தார்.
கல்வி விழிப்புணர்வு பேரவை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், கூட்டமைப்பின் பொருளாளர் சித்தார்த்தன்,
பேராசிரியர் வீரபாண்டியன், முகாம் செயலாளர் தண்டபாணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக
அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பு செயலாளர் வீரமணி,ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம்,
ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய ஆதரவற்ற பெண்களின் குடும்பத்தினருக்கு அரிசி காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் வெள்ளையம்மாள் கலியமூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எழிலரசன்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வணிகர் அணி துணை செயலாளர் 
தடாகணேசன், முகாம் நிர்வாகிகள் பசியவர்ணம், துரைக்கண்ணு,
தொழிலாளர் விடுதலை முன்னணி ஒன்றிய துணை அமைப்பாளர் அருள், ஒருங்கிணைப்பாளர்கள் கதிரவன் சக்திவேல்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image