இந்திய மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் கொரானா நலதிட்ட உதவிகள்.
சென்னை அடையாறு
இந்திய மக்கள் உரிமைகள் கழகம் நிறுவன தலைவர் சமூக சேவகர் டாக்டர் .குபேரன் அவர்களின் தலைமையில் கொரானா தாக்கத்தால் மக்கள் வருமானம் இன்றி தவிர்த்து வரும் நிலையில் அடையாறு மாளவியா அவுன்யூவிலுள்ள கழகத்தின் தலைமை அலுவலகத்தில், மருந்தீஸ்வரர் நகர் பகுதியை சார்ந்த 400 க்கும் மேற்பட்ட ஏழை எளியோர்க்கு தலா 5 கிலோ அரிசியும், மற்றும் காய்கறிகள் வழங்கினார்.
இதில் அனைவரும் சமூக இடைவெளி யை கடைபிடித்து பொருட்களை பெற்று சென்றனர்
இந்நிகழ்வில் அமைப்பு செயலாளர் ஜெ.சசிகுமார்,பொருளார் திருமதி,
கு. சித்ரா, இளைஞர்அணி சென்னை தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் தினேஷ்குமார் மற்றும் இப்பகுதியை சேர்ந்த கண்ணன்,சேகர், ரஜினிசெந்தில்,
அஸார் உள்ளிட்டோர் பங்கேற்று ஒத்துழைப்பு அளித்தனர்.
மேலும் இலவச பொருட்களை பெற்றுக்கொண்ட பொது மக்கள் இந்திய மக்கள் உரிமைகள் கழகத்தின் நிறுவன தலைவர் திரு .குபேரன் அவர்களுக்கு தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.