திண்டுக்கல்   அமிர்தா   கல்வி   நிறுவனங்கள்   சார்பாக     அமிர்தா கல்லூரியில்     பயிலும்    மாணவ      ,  மாணவியர்களுக்கு   கல்லூரி     தாளாளர்    ஜி. ஆர். சபரி    நிவாரணம்     வழங்கினார்.


திண்டுக்கல்   அமிர்தா   கல்வி   நிறுவனங்கள்   சார்பாக     அமிர்தா கல்லூரியில்     பயிலும்    மாணவ      ,  மாணவியர்களுக்கு   கல்லூரி     தாளாளர்    ஜி. ஆர். சபரி    நிவாரணம்     வழங்கினார்.


 


திண்டுக்கல்     மாவட்டம்    செட்டியப்பட்டி   ஊராட்சியில்   செயல்படும் அமிர்தா    கல்வி   நிறுவனங்கள்   சார்பாக    அமிர்தா   நர்சிங்    கல்லூரி , அமிர்தா   தொழில்   பள்ளி     ,  அமிர்தா  கேட்டரிங்   மேனேஜ்மென்ட்  ,  அமிர்தா பேஷன்   டிசைனிங்       மற்றும்    ஹெல்த் கேர்     உள்ளிட்ட     கல்லூரிகள் செயல்படுகின்றன.   இங்கு    சுற்றுப்புற     கிராமங்களான     செம்பட்டி  ,  ஆத்தூர்  ,  பாளையங்கோட்டை ,  சித்தையன்கோட்டை     ,  எஸ். பாறைப்பட்டி ,    சின்னாளப்பட்டி  , கன்னிவாடி ,  மதுரை -  வாடிப்பட்டி     உள்ளிட்ட  பல கிராமங்களைச்     சேர்ந்த   ஏராளமான  மாணவ     ,  மாணவிகள்   படித்து வருகின்றனர்.    கிராமப்புற   ஏழை  மாணவர்கள்   தான்   அதிகளவில்   படித்து     வருகின்றனர்.  தற்போது  கொரோனா   வைரஸ்    பாதிப்பால்  கடந்த   40 நாட்களுக்கு   மேலாக      மாணவ ,   மாணவியர்களின் பெற்றோர்கள்   யாரும்      வேலைக்கு    செல்ல     முடியாத    நிலை ஏற்பட்டதால்    மிகவும்   கஷ்டப்பட்டனர்.   இதை  அறிந்த  அமிர்தா கல்லூரியின்   தாளாளர்   ஜி .ஆர். சபரி      தனது  கல்லூரியில்  பயிலும்  ஏழை மாணவ     ,   மாணவர்களின்     குடும்ப    நலன்     கருதி     அவர்களின்    வீடுகளுக்கு    நேரடியாகச்     சென்று    அரிசி ,   பருப்பு     ,  மளிகை சாமான்கள் உட்பட    நிவாரணப்     பொருட்களை  தனது  சொந்த  செலவில்   வழங்கினார்.  இதற்கு அமிர்தா கல்லூரியில் பயிலும் கல்லூரி மாணவ , மாணவியர்களின்  பெற்றோர்கள்   நன்றியையும் , பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.    இதுகுறித்து சமூக ஆர்வலரும் ,   அமிர்தா   கல்லூரி   தாளாளருமான   ஜி .ஆர். சபரி  செய்தியாளரிடம்    பேசுகையில்   எங்கள்  கல்லூரியில்  சுற்றுப்புற கிராமங்களைச்   சேர்ந்த   மாணவ ,  மாணவியர்கள்  தான்   அதிக    அளவில் படித்து    வருகின்றனர்.    கடந்த  20   நாட்களாக  200க்கும்    மேற்பட்ட    மாணவ  ,   மாணவியர்களின்   குடும்பங்களுக்கு     நிவாரணம்     வழங்கி வருகிறோம்   . மேலும்  திண்டுக்கல்லை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களுக்கு சென்று முக கவசம் ,  கபசுரகுடிநீர்  ஆகியவை வழங்கி வருகிறோம் என்றார்.மாவட்ட நிருபர்: பி.இப்ராகிம்கான் திண்டுக்கல் செல் : 98421 61786
திண்டுக்கல்


Popular posts
ஸ்காமெட் & ஏற்றுமதி கட்டுப்பாடு இணக்கம் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை டிஜிஎஃப்டி நடத்தியது
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image