அமைச்சர் சிவி சண்முகம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அமைச்சர் சிவி சண்முகம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


திண்டிவனம் மே 5
திண்டிவனம் நத்தைமேடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். தற்போது 40 நாட்கள் மேலாக ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் தங்களது தொழில் செய்ய முடியாமல் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளரும் திண்டிவனம் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவருமான ஏ.வி.முகமது ஷெரிப் ஏற்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களுக்கு அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சி இந்திரா நகர் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் திண்டிவனம் காந்தி சிலை அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் சுமார் 50 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அமைச்சர் சி.வி சண்முகம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் ஜனார்த்தனன், ஜெயபிரகாஷ், விஜயகுமார், முரளி, தாஸ், அம்மா பேரவை நிர்வாகிகள் பாலாஜி, சங்கர், நவீன், ராஜா, பெரிய தம்பி, சக்தி மற்றும் கிளைச் செயலாளர் கார்த்திகேயன்,மஸ்தான்,காதர்,ஓட்டுனர் பாலு, பூதேரி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ச.சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image