.திண்டுக்கல் பேகம்பூரில் திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா செயல்திட்டத்தின் கீழ் 40-வது வார்டு ஆர்.ஏ.காஜாமைதீன் தலைமையில் 160 நபர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. May 20, 2020 • M.SENTHIL திண்டுக்கல் பேகம்பூரில் திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா செயல்திட்டத்தின் கீழ் 40-வது வார்டு ஆர்.ஏ.காஜாமைதீன் தலைமையில் 160 நபர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. திமுக தலைவரும் , சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் , கொரோனா பேரிடர் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கோடு திமுக சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஒன்றிணைவோம் வா செயல்திட்டத்தின் கீழ் திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் திமுக சார்பில் 40-வது வார்டு ஆர்.ஏ.காஜாமைதீன் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் , தோலுக்கு உப்பு தேய்க்கும் தொழிலாளர்கள் மற்றும் தள்ளுவண்டி தொழிலாளர்கள் என சுமார் 160 நபர்களுக்கு அத்தியாவசிய பொருளான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.அக்பர் , முன்னாள் கவுன்சிலர் எஸ்.முகம்மது இப்ராகிம் , மாவட்ட இலக்கிய அணி வி.முருகானந்தம் , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.பிலால் , கே.ஏ.ஆர்.ஆஜாத் , 40-வது வார்டு செயலாளர் சுருளி , அப்துல்காதர் , சர்க்கரை 39-வது வார்டு மெளலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.