நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திருவாரூர் மாவட்டத்திற்கு வழங்கினார் . 

 


நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திருவாரூர் மாவட்டத்திற்கு வழங்கினார் .


கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள் மேலும் வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்காக நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாயை திருவாரூர் மாவட்டத்திற்காக மார்ச் 26ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் வழங்கினார்.


இந்நிலையில் இந்த தொகை மூலம் கொள்முதல் செய்யப்பட்ட செயற்கை சுவாச கருவிகள் ,கிருமி நாசினிகள், முகக் கவசங்கள் ,கையுறைகள் உள்ளிட்ட 14 வகையான உபகரணங்களையும் இன்றைய தினம் திருவாரூர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் விஜயகுமார் அவர்களிடம் பயன்பாட்டிற்காக நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் வழங்கினார்.மற்றும் ஒரு வெண்டிலட்டர் திருவாரூர் விஜயபுரம் தாய் சேய் மருத்துவமனைக்கு வழங்கி உள்ளார் என்பத குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் க.பாலா


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image