திருப்பூர் அருகே மது கிடைக்காததால் சாராயம் காய்ச்சிய உணவக உரிமையாளர் கைது. அவரிடமிருந்து 20 லிட்டர் சாராய ஊரல் கீழே  ஊற்றி அழிக்கப்பட்டது.

திருப்பூர் அருகே மது கிடைக்காததால் சாராயம் காய்ச்சிய உணவக உரிமையாளர் கைது. அவரிடமிருந்து 20 லிட்டர் சாராய ஊரல் கீழே  ஊற்றி அழிக்கப்பட்டது.


திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொடியம்பாளையம் நால்ரோடு பகுதியில் சாராயம் காய்ச்ச படுவதாக எழுந்த புகாரையடுத்து ஊத்துக்குளி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது உப்பிலியன்காட்டுத்தோடட்ம் பகுதியில் ஓட்டல் உரிமையாளர் பூவேந்தன் (43) என்பவர் சாராயம் காய்ச்சி வருவது கண்டறியப்பட்டது இதனையடுத்து ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் தவமணி தலைமையிலான போலீசார் பூவேந்தன் தோட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் 2 லிட்டர் சாராயம் மற்றும் 20 லிட்டர் சாராய ஊறல் கண்டறியப்பட்டு ஊற்றி அழிக்கப்பட்டது. உணவக  உரிமையாளரான பூவேந்தன் ஊரடங்கு உத்தரவால் மது கிடைக்காமல் திண்டாடி வந்துள்ளார். இதனால் தனக்கு சொந்தமான நிலத்திலேயே சாராயம் காய்ச்ச முயன்று சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image