கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நகைதொழில்செய்யும் பட்டறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் 144 தடையுத்தரவு அமல்காலத்தில்வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு தங்களுக்கு தடைக்ககால நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில்
நகை செய்யும் தொழில் சார்ந்த கம்பி பட்டறை ஜன்ன கம்பி பட்டறை டை பட்டறை பால்ஸ் பட்டறை மெருகு பட்டறை மிஷின் கட்டிங் பட்டறை ஸ்கேன் கட்டிங் பட்டறை என பல்வேறு வகையான பட்டறைகள் என சுமார் 600 க்கும் மேற்பட்ட பட்டறைகள் உள்ளன.
இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் ஊரடங்கு மற்றும் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டதால் நகை
மற்றும் பட்டறை தொழிலாளர்கள் சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த சில மாதங்களில் மங்கல விழாக்கள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டதால் நகை தொழில் சார்ந்த மற்றும் இதர நுணுக்கமான வேலைகளில் கை தேர்ந்த கை வினை ஞர்கள்
மிகவும் பரிதாபமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
அவர்களை நம்பியுள்ள குடும்பம் வேலையில்லாததால் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். எனவே தமிழக அரசு நகைத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன் கருதி உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த
நகைத் தொழிலாளர்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட நகைத் தொழிலாளர்கள் விரைவில்
தொழில் செய்வதற்கு உரிய மானியத்துடன் கூடிய கடனை உடனே வழங்க வேண்டுமெனவும் நகைத் தொழிலாளர்களின் மொத்த கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. கோவில்பட்டி விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் மாரியப்பன் கருத்துகளை தெரிவித்தனர்.