திண்டிவனம் நகராட்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் ஆலோசனை.
திண்டிவனம் ஏப்ரல்-1
திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் திண்டிவனத்தில் ஊரடங்கை மக்கள் எவ்வாறு முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் கிடங்கல்-2,ரோஷனை பகுதிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து நடக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். மேலும் நகரில் உள்ள காய்கறி, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்த வேறு மாற்று இடத்திற்கு கடைகளை மாற்றுவது குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை,எஸ்.பி ஜெயக்குமார், திண்டிவனம் சார் ஆட்சியர் டாக்டர் அனு, வட்டாச்சியர் ராஜசேகர், ஆணையர் ஸ்ரீபிரகாஷ்,வானூர் தொகுதி எம்எல்ஏ சக்கரபாணி,டிஎஸ்பி கனகேஸ்வரி மற்றும் பொறியாளர் பவுல் செல்வம், துப்புரவு அலுவலர் (பொ) தேவநாதன் நகராட்சி துப்புரவு அலுவலர் தேவநாதன்,நகர அமைப்பு ஆய்வர் கோகுலகிருஷ்ணன். பணி ஆய்வர் ஆரோக்கியா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ச. சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்