செங்கம் அருகே கூலி தொழிலாளர்களின் நலன் கருதி கொரோனா நிவாரணமாக இலவச மளிகை தொகுப்புகளை நாள் தோறும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வழங்கி வருகிறார்கள்.
செங்கம் அருகே கூலி தொழிலாளர்களின் நலன் கருதி கொரோனா நிவாரணமாக இலவச மளிகை தொகுப்புகளை நாள் தோறும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மன்ற நிர்வாகிகள் ஊராட்சிகள் தோறும் ஆங்காங்கே தொடர்ந்து நிவாரண உதவி தொகுப்புகளை வழங்கி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் இருளர் சமுதாயத்தை சேர்ந்த ஏழை எளிய கூலி தொழிலாளர்களின் நலன் கருதி கொரோனா நிவாரணமாக இலவச மளிகை தொகுப்புகளை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகம் அவர்களின் ஆலோசனையின்படி அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்ற நிவாரண உணவு உபகரண தொகுப்புகளை மத்திய மாநில அரசுகளின் விதிமுறைக்கு உட்பட்டு சமூக இடைவெளியை பின்பற்றி கிராமங்கள் தோறும் வீடு வீடாக நேரில் சென்று இலவசமாக அரிசி, மளிகை தொகுப்புகள், முக கவசங்கள் மற்றும் கபசுரக் குடிநீர் ஆகியவைகளை மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ராமசந்திரன் பங்கேற்று வழங்கினர்.
மேலும் இதில் தொகுதி பொறுப்பாளர் சிவகுமார், முன்னால் ஒன்றிய செயலாளர் சதாசிவம், நகர செயலாளர் தனசிங், இளைஞர் அணி செயலாளர் மணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஏழுமலை, ஆடலரசு, மோகன், சாத்தனூர் ராஜாமணி, ரஜினிவேடி, இளைஞர் அணி துணை செயலாளர்கள் முத்து, நடராஜ், கோடிஸ்வரன் என மன்ற முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்று இலவச நிவாரண தொகுப்புகளை வழங்கினார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073