கடலூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
கடலூர் நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி பண்ருட்டி பண்ருட்டி வடலூர் குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி மற்றும் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் நேரில் பார்வையிட்டார்
இன்று கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு தொடர்ந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சியில் அனைத்து பகுதியிலும் நகராட்சி தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது இப்பணிகளை கிருமி நாசினி மற்றும் தூய்மை பணிகளை சரிவர செய்யாத நகராட்சி அலுவலர் சக்திவேல் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு மேலும் நகராட்சி அலுவலர் மீது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்தார்
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு முழு சுதந்திரம் ஏற்பட பொதுமக்கள் 100% ஒத்துழைப்பு வாங்கியுள்ளனர் இன்று பார்வையிட்ட அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை இது போன்று தொடர்ந்து 3ம் தேதி வரை தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை மேற்கொண்டு கொரோனா கிருமி தொற்றை தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது இந்த ஆய்வின் போது கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் பரிமளம் துணை ஆட்சியர் மங்கலநாதன் உதவி இயக்குனர் பேரூராட்சிகள் ராஜா வட்டாட்சியர்கள் செல்வகுமார் கடலூர் உதயகுமார் பண்ருட்டி கீதா குறிஞ்சிப்பாடி மற்றும் பலர் உடன் இருந்தனர்