மலைகிராம துப்பரவு பணியாளர்களுக்கு மளிகை பொருட்க மற்றும் முக கவசங்கள்அதிமுக சட்டமன்ற உறுப்பினர் .பன்னீர்செல்வம் வழங்கினார்

மலைகிராம துப்பரவு பணியாளர்களுக்கு மளிகை பொருட்க மற்றும் முக கவசங்கள்அதிமுக சட்டமன்ற உறுப்பினர் .பன்னீர்செல்வம் வழங்கினார்


 ஜமுனாமரத்தூர், ஏப்ரல.17_திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சக்திவேல் அவர்களிடம் . அதிமுக சட்டமன்ற உறுப்பினர் .பன்னீர்செல்வம் சொந்த நிதியில் முகக் கவசங்கள் மற்றும் கொரோனா நிவாரணமாக 14 வகையான மளிகைப் தொகுப்புகளை வழங்கினார். மேலும் இதனை தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வழங்கிய இலவச தொகுப்புகளை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் மலை கிராமத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு முக கவசங்களையும் மளிகை தொகுப்புகளையும் வழங்கினார்.


இதனை தொடர்ந்து ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலூர் ஊராட்சி உட்பட 11 மலைகிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று ஊராட்சிகள் தோறும் சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கினார். மேலும் ஜவ்வாதுமலை மழை கிராமத்தில் உள்ள சாலை மற்றும் வீதிகள்தோறும் கிருமிநாசினி தெளிப்பான் மூலம் தெளித்தார். பின்னர் மலை கிராம பொது மக்களின் நலன் கருதி காவலூர் ஆலங்காயம் திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர் போன்ற பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்லும் மலை சாலையில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியும் மருத்துவ பரிசோதனை மையத்தையும் ஆய்வு செய்தார். இறுதியாக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் உள்ள மகப்பேறு தாய்மார்களுக்கும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் போது ஆசைகளை வழங்கி கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தபின் கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக இதுவரை பரிசோதனை செய்ததையும் மேலும் புதியதாக நோய் தொற்றுகள் ஏதேனும் இருப்பதா என்பதை வட்டார மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தார். இதில் கழக நிர்வாகிகள் வெள்ளையன் பொய்யாமொழி ஜீவாமூர்த்தி கேசவன் என பலர் பங்கேற்றனர் இவர்களுடன் வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் ஆனந்தன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அலுவலக உதவியாளர்கள் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image