திருவாரூர் உலகப் புகழ்பெற்ற ஆழித்தேரோட்டம் தேதி குறிப்பிடாமல்
ஒத்திவைப்பு .
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்தார்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில் விழாக்கள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் அடுத்த மே மாதம் 4-ம் தேதி நடைபெறுவதாக இருந்த. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் ஒன்று கூட கூடாது என்பதற்காக திருவாரூர் ஆழித்தேரோட்டம் தேதி குறிப்பிடாமல்
ஒத்திவைக்கப்பட்டது என
மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.