செங்கம் அருகே 9 ஆடுகள் மர்மமான முறையில் இறப்பு ஆட்டின் உரிமையாளர் வேதனை.
செங்கம், ஏப்ரல். 30_திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் அடுத்த அரட்டவாடி அருகே குமார் என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் தேக்கி வைத்திருந்த தண்ணீரை அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி எனும் விவசாயிக்கு சொந்தமான 25 ஆடுகளில் 9 ஆடுகள் மட்டும் பருகிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் விளைநிலத்தில் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்துவிட்டதால் ஆட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து ஆட்டின் உரிமையாளர் சுப்ரமணி அருகிலிருந்த விவசாயிகளை அழைத்து ஆடுகளை காப்பாற்ற முயன்ற சிறிது நேரத்தில் அனைத்தும் உயிரிழந்ததால் வேதனை அடைந்தார்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை மர்மமான முறையில் இறந்த ஆடுகளை கால்நடை உதவி மருத்துவர் மூலம் பிரதப் பரிசோதனை செய்து இறப்பு குறித்த காரணம் கண்டறிந்த பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073