கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில்ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 30.மருத்துவ களப்பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக
செங்கம்,ஏப்ரல் 20- திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காரப்பட்டு வட்டார மருத்துவமனை மற்றும் புதுப்பாளையம், பெரியகுளம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 30.மருத்துவ களப்பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக 10.வகையான இலவச மளிகை தொகுப்புகள், முகக் கவசங்கள் பாதுகாப்பு கிருமிநாசினி போன்றவைகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் வழங்கினார். மேலும் இவருடன் கழக நிர்வாகிகள் பொய்யாமொழி, வழக்கறிஞர் ரமேஷ், தங்கமணி ஏழுமலை, சரவணன் என பலர் கலந்து கொண்டனர்கள். இவர்களுடன் வட்டார மருத்துவ அலுவலர் சுபத்ரா, உதவி மருத்துவர் விக்னேஸ்வரன், மருத்துவ மேற்பார்வையாளர், ஆய்வாளர், செவிலியர்கள் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073