போளூர் அருகே கல்குவாரி தொழிலாளர்களுக்கு ஜவ்வாதுமலை (ஸ்பீடு தன்னார்வ தொண்டு நிறுவனம்) சார்பில் கொரோனா நிவாரணமாக 25 குடும்பங்களுக்கு இலவச அரிசி காய்கறிகள் மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கினார்கள்.
போளூர்,.ஏப்ரல் - 24
திருவண்ணாமலை மாவட்டம்போளூர் அடுத்த புதுப்பாளையம் மற்றும் வசூர் ஆகிய கிராமங்களில் உள்ள கல்குவாரி தொழிலாளர்களின் நலன் கருதி ஜவ்வாதுமலை (ஸ்பீடு தன்னார்வ தொண்டு நிறுவனம்) சார்பில் கொரோனா நிவாரணமாக 25 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி உட்பட காய்கறிகள், மளிகை தொகுப்புகளை தொண்டு நிறுவனம் நிர்வாகிகள் அசோக், கலைவாணன் ஆகியோர்கள் கொரோனா நிவாரணங்களை வீடுகள் தோறும் நேரில் சென்று மத்திய மாநில அரசுகள் அறிவித்த சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கினார்கள்.
மேலும் இதனை தொடர்ந்து காவல் துறையினர் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு முககவசம் வழங்கி அவர்களுக்கு கொடிய நோயான கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இவர்களுடன் ஊராட்சி மன்றதலைவர் அன்புக்கரசி, கண்ணமங்கலம் செயின்ட் தாமஸ் நர்சிங் கல்லூரி தாளாளர் வேல்முருகன், சமுக ஆர்வலர்கள் ஆரணி மோசஸ், செல்வன், குமார், கிளையூர் டாக்டர் அப்துல்கலாம், நற்பணி மன்ற நிர்வாகிகள் கோபி, விஜய், சங்கரன் என பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073