திருப்பூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவர் கைது. அவர்களிடமிருந்து 208 மது பாட்டில்கள் பறிமுதல்.

திருப்பூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவர் கைது. அவர்களிடமிருந்து 208 மது பாட்டில்கள் பறிமுதல்.



திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் திருப்பூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி டாஸ்மாக் கடையின் பின்புறம் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த  அய்யப்பன், முத்துராமு என்ற இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து  208 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கார்த்திக், ரஜினி, பாஸ்கர் என்ற மூவரையும் தேடி வருகின்றனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image