மைசூரில் இருந்து வியாபாரம் செய்ய வந்தவர்கள் கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி அருகில் காடாம்புலியூர் எனும் ஊரில் தங்கி இருப்பதாகவும் ஊருக்கு செல்ல முடியாத நிலையில் உணவுக்கு வழியின்றி தவித்து வருவதாகவும் எங்களை யாரும் கவனிக்கவில்லை குழந்தைகளுக்கு பால் பொருட்கள் வாங்கக்கூட வசதியில்லாத நிலையில் மைசூர் தமிழ்ச்சங்க தலைவர் ஐயா கர்ணன் அவர்களும் செயளாலர் இரகுபதி அவர்களும் பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் சுந்தர பழனியப்பன் அவர்களை தொடர்பு கொண்டு உணவின்றி தவிக்கும் எம்மக்களுக்கு உதவிட பணித்தனர் அவர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று இன்று காலை செந்தமிழ்ச் சங்கத்தலைவர் கவிஞர் சுந்தர பழனியப்பன் செய்தித்தொடர்பாளர் கவிதை கணேசன் பொருளாளர் செ.வினோத் ஆகியோயோர் காடாம்புலியூர் விரைந்து சென்று 15 குடும்பங்களுக்கு அரிசி உணவுப்பொருட்கள் காய்கறிகள் குழந்தைகளுக்கு பிஸ்கட் போன்றவற்றை கொடுத்து அங்கிருந்த மக்களிடம் மைசூர் தமிழ்ச்சங்க நிர்வாகிகளிடம் பேச வைத்து விரைவில் அவர்கள் ஊருக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவர்களுக்கு உதவியை வழங்கி மகிழ்ந்தனர்
பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் சார்பில் மைசூரிலிருந்து வியாபாரம் செய்யவந்த 15 குடும்பங்களுக்கு அரிசி உணவுப்பொருட்கள் காய்கறிகள் குழந்தைகளுக்கு பிஸ்கட்வவழங்கப்பட்டது