தேவகோட்டையில் உணவின்றி தவித்த ஆதரவற்றோர் மற்றும் வீடற்ற ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கி வரும் ஆய்வாளருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டுகள் குவிந்து வருகின்றது
ஊரடங்கு உத்தரவால் தேவகோட்டையில் ஆதரவற்றோர் மற்றும் வீடற்றவர்கள் பலர் உணவின்றி தவித்து வந்தனர் இதை அறிந்த தேவகோட்டை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை தனது சொந்த செலவில் காவலர்கள் உதவியுடன் உணவு தயாரித்து தண்ணீர் பாட்டிலுடன் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார் இதுமட்டுமல்லாமல் படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்கு படிப்பதற்கு பண உதவி செய்து வருகிறார் அந்தோணி செல்லத்துரை உதவி செய்யும் இடத்திற்கு நேரடியாக செல்லாமல் சக காவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு உதவி புரிந்து வருகிறார் இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் ஆய்வாளரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாராட்டி வருகின்றனர்