தேவகோட்டையில் காய்கறிகளின் விலை உயர்வு கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம் .

தேவகோட்டையில் காய்கறிகளின் விலை உயர்வு கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம் .


தேவகோட்டை, மார்ச் - 30-


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஊரடங்கு உத்தரவை பயன்படுத்திகாய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பதாக பொதுமக்கள் புகார் . தேவகோட்டை தாலுகா அதிக கிராமங்கள் நிறைந்த பகுதியாகும் சுற்றுவட்டாரா கிராம மக்கள் அனைவரும் அன்றாட பொருள்கள் வாங்க தேவகோட்டைக்குத் தான் வரவேண்டும் தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மருந்து கடை , காய்கறிக் கடை, பலசரக்கு கடை . பால் விற்பனை மையம், ஒட்டல்களில் உணவுகளை பொட்டலமாக மட்டுமே மடித்து தர வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் ஊரங்கு உத்தரவை கடைபிடிக்க அரசு உத்தரவிட்டது. தேவகோட்டையில் தினசரி மார்கட் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டது கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் வருவாய்த்துறையினர் , நகராட்சி ஆணையாளர் , காவல் துறையினர் சேர்ந்து கூட்டம் கூடுவதை தடுக்கும் பொருட்டு சந்தையை ராம்நகர் அழகப்பா பூங்கா, நகரச் சிவன் கோயில், சிலம் பணி ஊரணி ஆகிய மூன்று இடங்களில் தற்போது காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது இந்த மார்க் கெட்டுகளில் 40 ரூபாய்க்கு விற்ற கத்தரிக்காய் 80க்கும், 30 ரூபாய்க்கு விற்ற தக்காளி 96க்கும் விற்பனை செய்யப்படுகிறது இதனால் அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் தற்போது கூலி வேலைக்கு கூட போக முடியாத சூழ்நிலையில் காய்கறி விலை உயர்வால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கொரோனா நோய் தொற்று வராமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்திக்காக காய்கறிகளை உண்ண வேண்டும் என்கிறார்கள் காய்கறிகளின் விலை உயர்வால் எப்படி காய்கறிகள் வாங்க முடியும் இந்த நிலை நீடித்தாள் சுடு கஞ்சியும், ஊறுகாய் சாப்பிடும் நிலைதான் வரும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர் இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இருந்தும் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் மிகுந்த மன வேதனையுடன் தெரிவிக்கின்றனர் கொரோனா தொற்று நோய் வந்து சாவதற்கு முன்னால் விலைவாசி உயர்வால் அன்றாடக் கூலி களாகிய நாங்கள் பட்டினி கிடந்து சாவு தான் இந்த அரசாங்கம் பார்க்கப் போகிறது என்று மனக் குமுறலை கொட்டித் சென்றனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image