எருக்கம் பால் ஊற்றி பெண் சிசுவை கொன்ற தாய் கைது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மொட்டனுத்து கிராமம் உள்ளது இங்கு வசித்து வந்த சுரேஷ் கவிதா தம்பதி என்பவர் கட்டிட வேலை செய்கிறார்கள்.
கல்யாணம் ஆகி 11 வருடங்கள் ஆகின்றன இவர்களுக்கு 10 வயது மற்றும் எட்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் .
இந்த நிலையில் கடந்த 26ம் தேதி கவிதாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது ஆனால் சில நாட்களாக அந்த குழந்தையை காணவில்லை. வீட்டில் இருந்து குழந்தையின் சத்தமும் வரவில்லை அதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வந்தது..
இதைப் பற்றி அருகில் உள்ள காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விசாரணையில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.
மூன்றாவது பெண் குழந்தை என்றவுடன் நெருக்கம் பால் ஊற்றி கொலை செய்தோம் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி உள்ளது
கொஞ்ச காலமாக இல்லாம இருந்த பெண் சிசு திரும்பவும் மதுரை தேனி மாவட்டங்களில் தித்தித்த தொடங்கி உள்ளது மேலும் அதிர்ச்சியாக உள்ளதா ஈவிரக்கமில்லாமல் பச்சிளம் சிசு கொலை கொள்ளும் இத்தகைய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தேனி மாவட்ட செய்திக்காக. அ.வெள்ளைச்சாமி