காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த 25 நாட்களாக தொடர் தர்ணா போராட்டம்

காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த 25 நாட்களாக தொடர் தர்ணா போராட்டம்


 


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த 25 நாட்களாக தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் திவாலாக போடுவதைக் கண்டித்து லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் சார்பில் லால்பேட்டையில் உள்ள தேசிய வங்கிகளில் பணம் எடுப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.


காலை 10 மணிக்கு சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்தியன் வங்கி சென்று தங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் சேமிப்பு பணங்களை மொத்தமாக எடுப்பதற்கு பணம் எடுக்கும் படிவத்தினை பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர். அதனையடுத்து வங்கியில் போதிய பணம் இல்லாத காரணத்தால் கணக்காளர் ஒருவருக்கு ரூபாய் 49000 மட்டும் வழங்கப்படும் என வங்கி மேலாளர் தெரிவித்தார். மேலும் முழு பணத்தினை ஓரிரு  தினங்களுக்குள்முழுமையாக அழித்து விடுவதாக கூறி அடுத்து பொதுமக்கள் வங்கிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர் ஏற்கனவே நேற்று ஜமாத் சார்பில் அனைத்து பள்ளிவாசல்களிலும் பணம் விடுப்பு போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரே நாளில் வங்கியில் கணக்கு வைத்த அனைவரும் மொத்த பணத்தையும் எடுக்க வந்ததால் லால்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image