கும்பகோணம் நகராட்சி தரப்பில் வழங்கப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் வாந்தி பேதி 18பேர் மருத்துவமனையில் அனுமதி

கும்பகோணம் நகராட்சி தரப்பில் வழங்கப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் வாந்தி பேதி காரணமாக மேலும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதி


கும்பகோணத்தில் கடந்த சில தினங்களாக கும்பகோணம் நகரில் பாதாள சாக்கடை அடைத்துக்கொண்டு கழிவுநீர் வீதியெங்கும் வழிந்தோடி காணப்படுகிறது இந்நிலையில் கழிவுநீர் குடிநீருடன் கலந்ததன் காரணமாக கும்பகோணம் இதயா கல்லூரி அருகே ஆனைக் காரன்பாளையம் என்ற பகுதியில் நேற்றைய தினம் நகராட்சி குடிநீர் பருகிய 9 பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் வாந்திபேதி காரணமாக  அனுமதிக்கப்பட்டனர் 


இந்த நிலையில் மேலும் 9 நபர்கள்  இதே பிரச்சினை காரணமாக  இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்  இதனைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் மூன்று பேர் அனுமதிக்கப்பட்டதாக  கூறப்படுகிறது 


பாதிக்கப்பட்ட 18 நபர்கள் தற்போது  கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதனையடுத்து அப்பகுதியில் கும்பகோணம் நகராட்சி தரப்பில் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் கழிவு நீரை சீரமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image