மேம்படுத்தப்பட்ட வர்த்தக எளிமை அற்புதமான முதலீடுகளை ஈர்க்கும்
-சௌமியா காந்தி கோஷ்
16-வது நிதி ஆணைய உறுப்பினர் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி குழுமத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்
உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் மீது சமீபத்தில் மீண்டும் மீண்டும் நம்பிக்கை தெரிவித்திருப்பது, கடந்த சில ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட இந்திய இறையாண்மையின் கட்டமைப்பு ரீதியான மீள்தன்மையின் வலிமையை நிரூபித்துள்ளது, வர்த்தக முன்னணியில் இருந்த குழப்பங்களைத் தணித்துள்ளது.
செல்வம் மறு பகிர்வு செய்யப்படுவதையும் வாய்ப்புகள் முழுமையாக ஜனநாயகப்படுத்தப்படுவதையும் உறுதி செய்வதற்கு எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வது என்ற தூண்களை வலிமைப்படுத்தும் கொள்கை மற்றும் ஒழுங்குமுறை துறைகளில் ஏராளமான சீர்திருத்தங்களை எளிதாக்குகிறது. அதே நேரத்தில் மக்கள்தொகை அளவில் முறைப்படுத்தல், நிதி மயமாக மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை பயன்படுத்தி விரும்பிய முதலீட்டை ஈர்ப்பது, போட்டியிடும் அதிகார வரம்புகளிலிருந்து கடுமையான போட்டியை முறியடிப்பது ஆகியவை முக்கிய அம்சங்கள் ஆகும்.
பெருந்தொற்றுக்குப் பிந்தைய புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் உற்பத்தித் துறையில் மாற்றத்தை அவசியமாக்கிய நிலையில், இந்தியா கடந்த காலத்தில் மிகக் குறைவான பயணப் பாதையைத் தொடங்கியுள்ளது. 'வெளியேறுவதை எளிதாக்குவதற்கான' தடைகளைத் தகர்த்து, உலகளாவிய முதலீட்டாளர்கள் சமூகத்திற்கு அந்நிய நேரடி முதலீடுகளில் இருந்து மூலதன வரத்துகளை வழிநடத்துவதில் ஒரு முக்கிய வேறுபாட்டைக் கொண்டுள்ளது. கடந்த 2000 முதல் அந்நிய நேரடி முதலீட்டில் 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகளை இந்தியா ஈர்த்துள்ளது. இதன் மூலம் சேவைகள், தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை பெரிதும் பயனடைந்துள்ளன.
2021 முதல் ஜிஎஸ்டி வசூல் 1.9 மடங்கும், பெரு நிறுவன வரி வசூல் 2.2 மடங்கும் அதிகரித்திருப்பதுடன், பெருநிறுவன லாபங்கள் 2021 முதல் 126%-மாக, 2.4 மடங்கு உயர்ந்துள்ளது. புத்தாக்கத் துறையில் பதிப்புரிமைகள் மற்றும் காப்புரிமைகள், அறிவுசார் சொத்துரிமை மற்றும் வர்த்தக முத்திரைகள் ஆகியவற்றில் நாட்டின் வளர்ச்சி விகிதம் வளர்ந்த பொருளாதாரங்களுக்கு சவால் விடும் வகையில் உள்ளன. முக்கியமான தொழில்நுட்பம் மற்றும் அரிய கனிமப் பகுதிகளில் உள்நாட்டு நன்மையைக் கொண்ட சீனாவால் மேற்கத்திய உலகின் ஆதிக்கம் கடுமையாகக் குறைக்கப்பட்டு வரும் நிலையில், கல்வி-நிறுவனங்கள்-தொழில் ஒத்துழைப்பின் ஒரு மாறும் மாதிரியை அறிமுகப்படுத்தி, இந்த மிக முக்கியமான துறையில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
உலகளாவிய பத்திர குறியீடுகளில் இந்தியாவை சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படுவதால், நமது கடன் சந்தையை மறுசீரமைக்க வேண்டியது அவசியமாகிறது, மேலும் பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் உள்ளிட்ட பல மாதிரி உள்கட்டமைப்புக்கு நிதியளிப்பதற்கு அதிக அளவு நிதி தேவைப்படும். இதனால், இந்திய தனியார் நிறுவனங்கள் இப்போது உலகளாவிய அடிப்படையில் சிந்திப்பதுடன், உலகம் முழுவதும் பிராண்ட் இந்தியாவை உறுதியாக வேரூன்றி, அதிவேக ஈர்ப்பு மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக இந்தியாவின் புலம்பெயர்ந்தோரின் பரந்த திறமைகளை இடம்பெறச் செய்ய வேண்டும்.